
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டின் நினைவு ஆரம்ப நாள்
தியாக தீபன் திலீபன் 1987 இல் சமாதான படையாக தமிழீழப் பிரதேசமெங்கும் ஆக்கிரமித்து இருந்த அகிம்சை
தேசமான இந்திய தேசத்திடம் ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து 12 நாட்கள் உணவு, நீர்
அருந்தாமல் தன்னுயிரை ஈகம் செய்து 38 ஆண்டுகள் நிறைவு நினைவு அண்மித்துக் கொண்டிருக்கிறது.
உண்ணா நோன்பு ஆரம்பித்த நாளாகிய 15.09.2025 அன்று 10.00மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்
காரியாலயத்தில் அவரது உருவப்படம் வைத்து ஈகைச் சுடரேற்றி மலர் தூவி ஆரம்பித்து வைக்கப்பட்டது.









