
அடுக்களைக்குள் முடங்கியிருந்த பெண்களை சகல துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக வளர்த்து, உலகை வியப்பில் ஆழ்த்தியவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். 2009 இல் ஆயுதப் போராட்டத்தை அமைதிப் படுத்தியபின், தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்ட பெண் போராளிகளின் தேசிய உணர்வு, திறமை, ஆளுமை, ஆற்றல்கள், போன்றவற்றைத் தொடராமல் தேசியப் போராட்டத்தில் இருந்து விலகி அமைதிப்படுத்தி இருந்துவிட முடியாது.
எமது தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு வலிமை சேர்க்க பிரான்சு வாழ் முன்னாள் பெண் போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று 12.10.2025 ஞாயிறுக்கிழமை அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வதுடன், தொடர்ந்து விடுதலைப் போராட்டப்பாதையில் வீச்சுடன் பயணிக்க முனைப்புக் கொள்வோம
அனைத்து பிரான்சு வாழ் முன்னாள் பெண் போராளிகளையும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைத்து நிற்கின்றோம். இதில் கலந்துகொள்ளும் முன்னாள் பெண்போராளிகள் தங்கள் வரவை உறுதி செய்துகொள்ளவும்..



