ஆண்டுகள் முப்பத்தெட்டு கடந்தும் உன் நினைவுகளுடன் பார்த்தீபா..!

0
47

ஊரெழு பெற்றெடுத்த எம்மினத்தின் தவம் புதல்வன் தமிழ் இனத்திற்காய் பன்னிரு நாள்கள் பசித்திருந்து பாரத தேசத்தின் முகத்திரையை கிழித்தாய் பார்த்தீபா..!

ஈழத் தமிழர்கள் கண்கள் சிவந்ததே அமைதி காக்க வந்த படை பொருந்தா செயற்பாடு கண்டு அகிம்சைப் போர் தொடுத்தாய் வீரப்புதல்வன் பார்த்தீபா..!

தமிழினம் மீது கொண்ட பற்றால் பசிப்புயலை வயிற்றில் அடக்கி உலகமே பார்த்திருக்க படிப்படியாய் உயிர்த்துடிப்பே அடங்கிப்போனதே இனத்திற்காய் பார்த்தீபா..!

பார்த்திருந்தோம் காத்திருந்தோம் காந்திய தேசம் ஐந்தம்சக் கோரிக்கையை நிறைவேற்றும் என்று ஆனால் மக்கள் விழிகளை பெருவெள்ளமாக்கி விடைபெற்றான் பார்த்தீபா..!

தியாக மகனின் அகம் நிறைந்த நினைவுகள் நிஜங்களாய் நிழலாட தலைமகன் சிரம் தாழ்த்தி ஆண்டுகள் முப்பத்தெட்டு கடந்தும் உன் நினைவுகளுடன் பார்த்தீபா..!

இன்னாளில் தியாகிக்கான உயர்வான வணங்குதலோடு உரிமைக்காய் உணர்வு கொள்வோம் இலட்சிய கனவுக்காய் ஒன்றாவோம் பார்த்தீபா…!

மகேஸ்வரன் சுமன்ராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here