பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர்கள், உடன் பிறந்த உறவுகளுக்கு பிரான்சு மாவீரர் பணிமனை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:-
அன்பான பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர்களே! உடன் பிறந்த உறவுகளே வணக்கம்! தங்களிடம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் அன்பான வேண்டுகோள்!
எங்கள் இதயத்தில் கண்கண்ட தெய்வங்களாக வாழும் மாவீரர்களை நவம்பர் 27 ஆம் நாளில் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்பாக தீபமேற்றி கார்த்திகை மலர் கொண்டு வணக்கம் செய்யும் ஓர் புனிதநாளாகும். இந்த நாளில் உங்கள் பிள்ளைகளினதோ. உடன் பிறந்தோர்களினதோ திருவுருவப்படங்கள் இதுவரை வைக்கப்படாதிருந்தால் அவர்களின் படங்களை விரைவாக ஒக்ரோபர் 30 ஆம் நாளுக்கு முன்பாக எம்மிடம் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதோடு (2025 தேசிய மாவீரர்நாள் நவம்பர் 27 நாள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்)
உங்கள் தொடர்புகளை நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தொடர்புகளுக்கு
மாவீரர் பணிமனை : 0782 54 80 90
மேலதிகத் தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு : 01 48 22 01 75-06 29 16 25 41
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”




