ஈருளிப்பயணமானது இன்று காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானிய தேசத்தில் ஆரம்பித்து ஐ . நா. நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 05.09.2025 ஒன்பதாவது நாள் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பித்தது,




