
செம்மணி சித்துப்பாத்தி நிலத்தில் 03/09/2025 வரை 222 பேரின் அதாவது எமது உறவுகளின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. .
வரும் 7ஆம் நாள் செம்மணியில் படுகொலை செய்து புதைக்கப்பட்ட கிருசாந்தியின் நினைவுநாள்.
இவள்போல் பல்லாயிரம் உடல்கள் எமது தமிழீழ மண்ணில் நம்பிக்கையோடு காத்துக்கிடக்கின்றனர் எமக்கான நீதிகிடைக்கும் அதை வாழும் எமது மக்கள் பெற்றுத்தருவார்கள் என்று உறங்கிக்கொண்டிந்தார்கள். இன்று அவர்கள் உயிரற்றவர்களாக இருந்தாலும், உண்மையையும், உணர்வையும்,உறுதியையும் தந்து நிற்கின்றார்கள். உயிரற்ற் உடலைச்சுமந்த சாட்சியங்களாக !
உலகின் முன் நீதிகோட்டு நிற்போம் வாருங்கள். 15.09.2025 திங்கட்கிழமை ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய போரணியில் பங்கெடுப்போம் வாருங்கள். பிரான்சு பாரிசிலிருந்து புறப்படும் வாகனப்பேரணியில் இணைந்துகொள்வோம்.
மேலதிக விபரங்களுக்கு:- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சுடன் தொடர்பு கொள்ளவும்.
( இந்த தகவலையும் அனைவருக்கும் அறியத்தரவும்.)



