
பிரான்சில் இன்று 30.08.2025 சனிக்கிழமை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் திறந்தவெளிக் கண்காட்சி ஒன்றை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்து திறம்பட நிகழ்த்தி இருந்தது.
பிற்பகல் 15..30 மணிமுதல் பாரிஸ் ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கெற்ரோ பகுதியில் இடம்பெற்ற இக்கண்காட்சியை பல வெளிநாட்டவர்களும் பார்த்து, கேட்டு எமது பிரச்சினைகளை அறிந்துகொண்டனர்.















