வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா!

0
181


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று புதன்கிழமை மாலை சப்பரம் காண பல்லாயிரக்கணக்கான அடியார்கள் திரண்டிருந்த நிலையில், 24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் அலையெனத் திரண்டு வருகை தந்திருந்தனர்.
மேலும், நாளைய தினம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் மறுநாள் பூங்காவனத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here