
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று 12.08.2025 காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அதாவது திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த உந்துருளி ஏ9 வீதியில் ஏற முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



