முந்தையன்கட்டு குளத்தில் இளைஞன் மரணம்: உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்கு!

0
101

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் நீரின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தார் முத்தையன் கட்டுக் குளத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இன் நிலையில் குறித்த சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இறந்த இளைஞனின் வயிற்றில் நீர் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான பகுப்பாய்வுக்காக சடலம் காணப்பட்ட முத்தையன் கட்டு குளத்து நீர் மற்றும் அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமின் நீர் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here