
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2025)திங்கள் 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்றது.

- பொதுச்சுடரினை
திரு பரராஐசிங்கம்
(உப பொறுப்பாளர் தமிழ்ச்சங்கம் கிளிச்சி ) அவர்கள் ஏற்றிவைக்க - ஈகைச்சுடரினை படுகொலை செய்யப்பட்ட மனித நேயப் பணியாளர்களில் ஒருவரான செல்வி கோவர்த்தினி அவர்களின் சகோதரர் திரு அமுதன் சிங்கநாயகம் அவர்கள் ஏற்றி வைத்தார்
- மலர்வணக்கத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி தட்சாயினி பாக்கியநாதன் செலுத்தியிருந்தார்
தொடர்ந்து சிறப்புரையினை படுகொலை செய்யப்பட்ட
செல்வி கோவர்த்தினி அவர்களின் சகோதரர். திரு அமுதன் சிங்கநாயகம்
அவர்களும்,பிரெஞ்சு மொழியிலான உரையினை கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி ரபிசா ரவிச்சந்திரனும்,இறுதியாக தொகுப்புரையினையும்,நன்றியுரையினையும் கிளிச்சி தமிழ்ச்சங்க பொறுப்பாளர் திரு சச்சி கந்தையா அவர்களும் ஆற்றியிருந்தார்கள்.
அவரின் உரையில் கிளிச்சி நகர சபையின் ஆதரவுடன் பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பிற்கு (ACF) கோரிக்கை ஒன்றினை அனுப்பி இதுவரை காலமும் இந்த படுகொலைக்கான நீதியினை பெறுவதற்கான நகர்வில் அவர்களின் செயற்பாடுகளையும்,அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் உத்தியோகபூர்வமாக கேட்டுப்
பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.
















பிராங்கோ தமிழ்ச்சங்கம்
கிளிப்பிள்ளை


