
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்கொன்றின் மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் கருங்கடல் அருகே உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் இராணுவம் நேற்று முன்தினம் (2) இரவு முதல் தொடர்ச்சியாக ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நேற்று அதிகாலை(3) வரை உக்ரைனின் 93 ட்ரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது


