
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது..!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நேற்று(01.08.2025) மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இத் போது நிலக்சனின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.






