பிரான்சில் இன்றும் நாளையும் மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2025

0
302

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் விளையாட்டுத் துறையினால் தமிழர் கழகங்களிடையே வருடாந்தம் நடாத்தப்படும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2025

கடந்த 05.07.2025 சனிக்கிழமை மற்றும் 13.07.2025 காலை 10.00 மணிக்குத் தெரிவுப் போட்டிகளாக ஆரம்பமாகி இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றன. தெரிவுப் போட்டிகள் இன்று 19.07.2025 சனிக்கிழமை இடம்பெற்று இறுதிப்போட்டிகள் நாளை 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here