
இன்று ‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது. இச்சிறை ஜூலை 14, 1789 அன்று புரட்சியாளர்களால் தாக்கப்பட்ட நாளே ‘பஸ்தில் நாள்’ என பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஜூலை 14 பிரெஞ்சு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்.




