
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது குழந்தைகளின் விளையாட்டு பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்கு கீழேயே குறித்த பொம்மை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட காலணி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலணி “Bata” நிறுவனத்தின் பெயர் பொறித்த காலணியாகும். பெண்களின் காலணியை ஒத்தாக அது காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.









