பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகளின் இரண்டாம் நாளான இன்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை அகவணக்கத்துடன் ஆரம்பமாகி இடம்பெறுகின்றன.
குறித்த போட்டிகள் முதல் நாளான நேற்று (28.06.2025) சனிக்கிழமை வித்றி பகுதி விளையாட்டுத் திடலில் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிப்புச்செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 12.07.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இப்போட்டியில் மாணவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதைக் காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.














