பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டிகள் 2025 நாளை ஆரம்பம்!

0
221

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் நாளை (28.06.2025) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்றி பகுதி விளையாட்டுத் திடலில் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது. .

தொடர்ந்து மறுநாள் 29.06.2025 ஞாயிறு இதேபகுதியில் தெரிவுப்போட்டிகள் இடம்பெறும் அதேவேளை, எதிர்வரும் 12.07.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இப்போட்டியில் மாணவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதைக் காண அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here