அனைவரும் விடுதலைத்தேரின் வடத்தை இறுகப்பற்றி உண்மையுடன், அர்ப்பணிப்புடன் பயணிப்போம்!

0
131

தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 ஆம் ஆண்டு மாவீரர்நாள் கொள்கைப் பிரகடனத்தில் கூறிய வேத வார்த்தைகள்.
“ இந்த வரலாற்றுச் சூழமைவில் ,தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக்கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப்பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகின்றேன்.
அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தச்சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப்பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.’’
என்ற தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று புலத்தில் செய்யும் செயற்பாடுகளின் பலாபலன்களே இவைகள். இது ஆமைவேகத்தில் பயணித்தாலும் இலக்கை சென்றடையும் என்று நம்பிக்கை கொண்டு அனைவரும் விடுதலைத்தேரின் வடத்தை இறுகப்பற்றி உண்மையுடன், அர்ப்பணிப்புடன் பயணிப்போம்.

  • அவதானி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here