ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி கோரல் போரின் புதிய வடிவமே அணையா விளக்கு!

0
267

பொங்கு தமிழ், எழுக தமிழ், P2P போராட்டங்களுக்கு பின்னர் அணையா விளக்கு போராட்டமும் தமிழின மக்கள் எழுச்சிக்கான புதிய களமாகும்.

நேற்றுக் காலை செம்மணியில் ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டமானது நாளை புதன்கிழமை காலை மாபெரும் மக்கள் எழுச்சியொன்றை ஏற்படுத்தப்போகின்றது.

எழுச்சிகொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை என்பதற்கிணங்க நாளை செம்மணியில் இடம்பெறும் மக்கள் எழுச்சியானது சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் புதிய செய்தியொன்றைச் சொல்லப்போகின்றது.

மரியாதையோடு நாம் மண்ணுக்குள் புதைத்த உறவுகளினதும் அடித்து முறித்து சித்திரவதைகளின் பின் சிங்களப் படைகளால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உறவுகளினதும் கனவுகளை நனவாக்க நாளை செம்மணியில் திரண்டெழுவோம்.

(நன்றி: பிருந்தாவன் பொன்ராசா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here