
ஈழதமிழர் திரைப்பட சங்கமும் பிரான்சு தமிழர் கலை பண்பாட்டு கழகமும் இணைந்து இருநாட்கள் நடாத்திய நடிப்பு பயிற்சி பட்டறை – வெற்றிகரமாக நிறைவுற்றது!

குறித்த பயிற்சி அமர்வு, எதிர்பார்த்ததைவிட மிகுந்த உற்சாகத்துடன், பங்கேற்பும் ஆதரவும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.
20 பயிற்சியாளர்களுக்கான திட்டம் இருந்தபோதிலும், 27 பேர் பங்கேற்று, இந்த கலை பயணத்தில் தங்களது இடத்தைப் பெற்றனர்.
சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை – புலம்பெயர் தமிழர் சமூகத்தின் அனைத்து வயதினரும் ஆழ்ந்த ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டதைப் பார்ப்பது பெருமையளிக்கும் தருணமாக இருந்தது.

இந்த பயிற்சி நிகழ்வின் கலைத் தலைமையாக்கம் வழங்கியவர் – ஆதவன் Cathiresarpillai ஆசிரியர்.
அவர் வழங்கிய கருத்துக்கள், அறிவுரை, செயல்முறை பயிற்சிகள் இளைய தலைமுறையின் திறமைகளை முன்னெடுத்தது.

இந்த பயணத்தில் எம்முடன் தோளோடு தோள் நின்று, உற்சாகம், ஆதரவு, நம்பிக்கை வழங்கிய அனைத்து
அனுசரணையாளர்களுக்கும், நண்பர்களுக்கும்,
முழு உள்ளத்துடன் ஏற்பாட்டாளர்கள் நன்றியறிதலை வெளிபாபடுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு பங்களிப்பும் – இந்த நிகழ்வை வெற்றியாக மாற்றிய முக்கிய அங்கமாக இருந்தது.
இணைந்து செயல்படும் இளம் தலைமுறைதான்






