
“உரிமைக்காக எழு தமிழா”
பிரான்சில் திரான்சி தொடருந்து நிலையத்தில் இருந்து பெல்சியம் நோக்கி தமிழின ஆதரவாளர்கள் சற்று முன்னர் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் இன்று 23.06.2025 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




