
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக தமிழியல் பட்டப்படிப்பிற்கான
புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் இன்று (15/06/2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 17.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் சிறப்பாக
இடம்பெற்றது.

வளர்தமிழ் 12 முடித்தவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் குறித்த பட்டப்படிப்பினைத் தொடர பலரும் ஆர்வத்துடன் முன்வந்தமையைக் காணமுடிந்தது. அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக தமிழியல் கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களால் கற்கையை நிறைவுசெய்த மாணவர்கள் பூங்கொத்துவழங்கி வரவேற்கப்பட்டதுடன், அவர்கள் பற்றிய அறிமுகமும் செய்துவைக்கப்பட்டு கவியுரைத்து நினைவுப் பரிசும் வழங்கி அவர்களின் அனுபவப் பகிர்வுகளுடன் பசுமை நிறைந்த நினைவுப் பாடல் ஒலிக்க கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கப்பட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
1.செல்வி எட்வேட் லூயிஸ் வெர்ஜினியா – பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். அதே பள்ளியில் 3 வருடங்கள் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
2_நிக்ஷன் ரஞ்சித்குமார் குயின் யூடித் எழில் ஓவியா
சோதியா கலைக் கல்லூரியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார்.
- செல்வி ஜெயராஜ் ஜெயாணிகா
பாரிஸ் 14-15 தமிழ்ச்சோலைப் பள்ளியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். அத்துடன் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
- செல்வி ஆஷிக்கா கணேசலிங்கம்
நீஸ் தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். அதே பள்ளியில் நான்கு ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். - செல்வி மாதங்கி குகதாசன் –
செர்ஜி தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். - செல்வி மனோகரன் லிஷானி –
Aulnay sous-bois தமிழ்ச்சோலைப் பள்ளியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்து அதே பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். - செல்வி மயூரன் ஆரணி –
Aulnay sous-bois தமிழ்ச்சோலைப் பள்ளியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். - செல்வன் நாகயோதீஸ்வரன் டினோயன்
இவ்ரி-சுர்சனில் (Ivry-sur-Seine) வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். - செல்வன் ராஜசூரியார் இந்திரஜித் –
பாரிஸ் 17 தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 ஐ நிறைவுசெய்து அதே பள்ளியில் 9 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிவருகிறார். - செல்வி திலிப்குமார் தானுகா
திறான்சி தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்து அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றார். - செல்வி சிறிகாந்தராசா தமிழினி
குசான்வில் தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். அதே பள்ளியில் 5 ஆண்டுகளாக தமிழாசிரியராகப் பணியாற்றிவருகின்றார். - செல்வி சிறிகாந்தராசா தமிழருவி
குசான்வில் தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார். - செல்வன் சிறிகாந்தராசா தமிழ்பிரியன் குசான்வில் தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்துள்ளார்.
- செல்வி சுபச்சந்திரன் சுஸ்மிதா
Bobigny தமிழ்ச்சோலைப் பள்ளியில் வளர்தமிழ் 12ஐ நிறைவுசெய்துள்ளார். - ஜோசப் அன்ரனி யூட் யூட்கிறேசியா
லாகூர்நெவ் தமிழ்ப்பள்ளியில் வளர்தமிழ் 12ஐ நிறைவு செய்து, ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். - மோகனராசன் ரஜீவன்ராஜ்
- திருவாட்டி லவகுமார் சந்திரவதனி
பாரிஸ் 15 மற்றும் குசன்வில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். - திருவாட்டி இரத்தினசிங்கம் கோகிலா ஹிமாலினி
பிரான்சில் தமிழ்ச்சோலையில் 8 வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். - திருவாட்டி புவனேந்திரன் அன்பழகி
பிரித்தானியா Darfort முத்தமிழ்ப் பாடசாலையில் அதிபராக பணியாற்றி வருகின்றார். - திருவாட்டி கார்த்திகேசு பங்கயவதனி
திருச்சியில் கணிப்பொறி பயன்பாடுகளில் முதுநிலைப்பட்டயம் படித்து முடித்துள்ளார் (Diploma in computer PGDCA). - திருவாட்டி மயில்வாகனம் வகிந்தினி
இலண்டனில் அறிவொளி தமிழ்ப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகின்றார்.
ஆகிய மாணவர்களே கற்கையை நிறைவு செய்தவர்களாவர். இவர்களில் இன்றைய நிகழ்வில் தவிர்க்க முடியாத கரணியங்களால் பலர் வருகை தரமுடியாத நிலையில்
Ø குகதாசன் மாதங்கி
Ø இரத்தினசிங்கம் கோகிலா ஹிமாலினி
Ø இராசசூரியர் இந்திரஜித்
Ø நாகயோதீஸ்வரன் டினோயன்
Ø ஜோசப் அன்ரனியூட் யூட்கிறேசியா
Ø மனோகரன் லிஷானி
Ø நிக் ஷன் ரஞ்சித் குமார் குயின் மூடித் ஓவியா
Ø மோகனராசன் ரஜீவன்ராஜ்
ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து கற்கையைத் தொடரும் மாணவர்களும் புதிய மாணவர்களும் தம்மை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களும் தமது உள்ளக்கிடக்கைகளைப் அழகாகப் பகிர்ந்து கொண்டமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
விரிவுரையாளர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்
சோதியா கலைக்கல்லூரியின் பிரதம நிர்வாகி திரு.செல்வக்குமார் அவர்களும் தனது உணர்வினைப் பகிர்ந்திருந்தார்.
சோதியா கலைக்கல்லூரியில் இம்முறை வளர்தமிழ் 11 இனை நிறைவு செய்த 3 மாணவர்கள் ஆர்வமிகுதியினால் நிகழ்வில் கலந்துகொண்டு, தாம் வளர்தமிழ் 12 இனை நிறைவு செய்தவுடன் பட்டப்படிப்பைத் தொடரவுள்ளதாக உறுதிகூறியமை ஏனையவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
நிறைவாக தமிழ்ச் சோலைத் தலைமைப் பணிமனை தமிழியல் பட்டப்படிப்பு சார்பில் ஆசிரியர் திரு. அமலதாஸ் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார்.
தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம்.
இதேவேளை, தமிழியல் பட்டப்படிப்பினைத் தொடரவிரும்பும்
புதிய மாணவர்கள் இம்மாத இறுதிவரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.









































( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – ஊடகப் பிரிவு)


