தேசிய அளவில் நாளை ஒரு நிமிட மௌன அஞ்சலி – கல்வி அமைச்சர்!

0
11

நாளை ஜூன் 12 (வியாழன்) மதியம் 12 மணிக்கு பிரான்சின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1 நிமிட மௌனம் அனுசரிக்கப்படும்.

நோஜென்ட் கொலேஜில் ஒரு 14 வயது மாணவனால் குத்துப்பட்டு உயிரிழந்த 31 வயது கல்வி உதவியாளர் மெலனி ஜி. யின் நினைவாக இந்த மௌனம் அனுசரிக்கப்படுகிறது.

‘கல்விச் சமூகம் முழுவதும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த மௌனம், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் கல்வித்துறையினருக்கான ஆதரவை வெளிப்படுத்துகிறது’ என்று கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

‘நாம் பாடசாலைகளைப் பாதுகாக்க வேண்டும், அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும். இது முழுமையான முன்னுரிமை. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளி முன்பும் சோதனை நடத்த முடியாது.’ என்ற எலிசபெத் போர்னின் கருத்து, ‘இந்த சம்பவம் கல்வி முறையின் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ என கல்வி தொழிற் சங்கங்கள் விமர்சனம் தெரிவித்துள்ளன.

இந்த மௌனம், பாதிக்கப்பட்டவரின் நினைவாக மட்டுமல்ல, பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்து சிந்திக்கும் வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here