
பிரான்சு மூல்கவுஸ் (Mule house) நகரில் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2025 சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச் சோலை கீதத்துடன் தேர்வு ஆரம்பமாகி இருந்தது.
மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான மாணவர்களுக்கு பரீட்சைகள் சிறப்பாக நடைபெற்றன.



