
பிரான்சு லியோன் நகரில் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2025 சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.
இத்தேர்வில் 23 மாணவர்களும் பங்கேற்றார்கள்.
மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான பரீட்சைகள் நடைபெற்றன.
இத்தேர்வு.
பெற்றோர்களினது பங்களிப்பும், ஆசிரியர்களினது தயார்படுத்தலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதை காணக்கூடியதாக இருந்தது.
தொடர்ந்து ஊக்கத்துடன் தமிழ்மொழியைப் பயின்று இந்தத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகள்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 23வது தடவையாகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை நடாத்தி முடித்துள்ளது. அனைவரதும் ஒருமித்த ஒத்துழைப்பால் ஒவ்வோராண்டிலும் இத்தேர்வு மென்மேலும் சிறப்படைந்து வருகின்றது.
“தமிழுக்காய் வாழ்ந்திருப்போம் தமிழால் இணைந்திருப்போம்”
லியோன் பிராங்கோ தமிழ்ச்சங்கம்.









