டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு – 2025

0
9

டென்மார்க்கில்  நடைபெற்ற நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2025 .

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் இவ்வாண்டும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டுகள் போலவே இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மாணவர்கள் அனைவரும் உற்சாகமாகவும் மனநிறைவுடன் தேர்வில் பங்கேற்றதைத்அவதானிக்க முடிந்தது.

மேற்பார்வையாளர்களாகப் பங்கு பற்றிய நிருவாகிகளும் ஆசிரியர்களும் தங்களது பொறுப்பை மிகச் சீராக, முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றியுள்ளனர்.

எமது தாய்மொழியின் தனித்துவத்தை உணர்ந்து, இத்தேர்வில் பங்குபற்றிய அனைத்து மாணவ மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மற்றும் நிர்வாகிகளுக்கும், டென்மார்க மாலதி தமிழ்க் கலைக்கூடம் தமது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here