
எதிர்வரும் 15-06-2025 மாலை 5.01மணிக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
ஆண்டு-12 நிறைவு செய்த மாணவர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் தமிழார்வலர்களும் இப்பட்டப்படிப்பில் இணைந்து தங்கள் தகைமைகளை மேலும் மெருகூட்டிக் கொள்ளலாம்.

தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்டமேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதனையும் தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3)
பதிவிற்குத் தேவையான ஆவணங்கள் :
- அதிஉயர் கல்விச் சான்றிதழ்
- அடையாள அட்டை அல்லது கடவுப்புத்தகம் (Passeport)
- அண்மையில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.
இத்தெரி-செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அவர்களும் இப்பட்டப்படிப்பில் இணைந்துகொள்ள வழிகாட்டி, எங்கள் தாய்மொழியின் இருப்புக்கும் மேம்பாட்டிற்கும் துணை நிற்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
*பிரிய முன் கூடுவோம் நிகழ்வு *
மேலும் இதே நாளில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மதிப்பளிப்பு இடம் பெறவுள்ளது.
