
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு கடந்த 31.05.2025 சனிக்கிழமை அன்று பிரான்சில் நுவாசிலுசெக் நகரில் . தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.





























