
தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும், வரவேற்பு நிகழ்வும்
எதிர்வரும் 15-06-2025 மாலை 5 மணிக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் இடம்பெறவுள்ளது.
ஆண்டு-12 நிறைவு செய்த மாணவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும்,மற்றும் தமிழார்வலர்களும் இப்பட்டப்படிப்பில் இணைந்து கொள்ளலாம்.
தமிழ்ச்சோலை நிர்வாகிகளும் இப்பட்டப் படிப்பில் இணைவதனூடாகத் தங்கள் தகைமைகளை மேலும் மெருகூட்டிக் கொள்ளலாம்.
தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்டமேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்பதனையும் தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3)
பதிவிற்குத் தேவையான ஆவணங்கள்
- அதிஉயர் கல்விச் சான்றிதழ்
- வதிவிட அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு
- அண்மையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் – 3
இத்தகவலைத் தங்கள் தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கும்,
வளர் தமிழ்-12 நிறைவுசெய்துள்ள மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களும் இப்பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ள வழிகாட்டி, எங்கள் தாய்மொழியின் இருப்பிற்கும் விருத்திக்கும் துணைநிற்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி.