
இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்றுகள் பரவலாக அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதிப்பு அதிகரிப்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
பாங்காக், சோன்பூரி, சமுத் பிரகான், நொந்தபுரி மற்றும் ராயோங் ஆகிய இடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தாய்லாந்து சுகாதார அதிகாரிகள் பருவகால உயர்வை மழைக்காலம் மற்றும் பாடசாலை விடுமுறையுடன் இணைத்து, பொது போக்குவரத்து, பாடசாலைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் போன்ற நெரிசலான இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாகவே உள்ளன என்று எச்சரித்துள்ளனர்.
அறிகுறிகள் இருந்தால் முகமூடிகளை அணியவும், சுவாசபிரச்சினை தொடர்பாக அறிகுறிகள் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும், தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் போது ATK கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.