
பிரான்சு லியோன் நகரில் .
லியோன் பிரான்கோ தமிழ்ச்சங்க ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு நாள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்ச்சோலை மாணவர்கள், பெற்றோர்கள், முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலிகளை மிகவும் உணர்வுபூர்வமாக செலுத்தினார்கள்.
வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் சோகம் நிறைந்த பாடல்கள் ஒலிக்க தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள்,
தமிழ்ச்சங்க தலைவர், செயலாளரின் உரைகள் நிகழ்ந்தன.
நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டு நினைவுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன..








