பிரான்சு 93 மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் அதிகம் வாழும் பொபினி என்னும் மாநகரத்தில் இன்று 17.05.2025 காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர், துணை முதல்வர் பொதுச்சுடர் ஏற்றி வைக்க பொதுமக்கள்,இளையவர்கள், சிறியவர், பெரியோர், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டு மீண்ட குடும்பங்கள் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்காக சுடர் ஏற்றி, மலர் கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.





