பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்று முடிந்த புலன்மொழி வளத்தேர்வு!

0
37

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் புலன்மொழி வளத்தேர்வு கடந்த 03.05.2025 சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமாகி மறுநாள் 04.05.2025 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று முடிந்த நிலையில் இன்று 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக இடம்பெற்றது.

இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர், லியோன்) மொத்தம் 5 ஆயிரத்து 716 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.

 03.05.2025 சனிக்கிழமை 21 தேர்வு புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்றதுடன் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு வரும் 07.06.2025 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு–ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here