
நெதர்லாந்தில், தமிழின அழிப்பு நினைவு நாள்- மே 18 பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணைகளையும் பன்னாட்டு மக்களிற்கு இவ் இன அழிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களில் ஆங்கில, டச் மொழிகளில் பிரசுரங்கள் தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் விநியோகிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்பரப்புரைகள் நெதர்லாந்தின் பல பிரதேசங்களிலும் மே 18 வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



