கிண்ணியா, காக்காமுனை கடலில் படகு கவிழ்ந்து மூவர் சாவு!

0
167

boadகிண்ணியா, காக்காமுனையிலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.     கச்சான் அறுவடைக்காக இன்று சனிக்கிழமை  காலை சென்றுக்கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூன்று மாத கர்ப்பிணியான அஷ்மா (வயது 17) உவைஸ் பனூஷ் (வயது 12) மற்றும் கடாபி முனிஷா (வயது 7) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.      இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here