
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு நடாத்தும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு இன்று 03.05.2025 சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது.

இன்று காலை 7.30 மணியளவில் அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் தேர்வுத்தாள் மண்டபப் பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
தொடர்ந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளின் மண்டபங்களில் தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டு அகவணக்கத்தைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.
இம்முறை Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,லியோன்,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 5 ஆயிரத்து 716 மாணவர்கள் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ்12 வரை தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளனர்.
இன்று 03.05.2025 சனிக்கிழமை, நாளை 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை, எதிர்வரும் 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெறவுள்ளதாகவும்.

தமிழ்மொழி எழுத்துத் தேர்வு வரும் 07.06.2025 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.












