
படுகொலைகளால் நிலம் பறிக்கப்பட்ட எமக்கு நீதி எங்கே?
மயிலிட்டி மண்ணில் இருந்து நமது மக்கள் சிறீலங்கா இராணுவத்தின் பலவந்தமான மற்றும் கொடூரமான இராணுவ நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்தும், சொந்த நிலத்தில் முழுமையாக மீள்குடியேற முடியாமல் தவிக்கும் மயிலிட்டி மக்கள், தங்களின் உடனடி மற்றும் முழுமையான மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இடப்பெயர்வின் வலியைச் சுமந்து நிற்கும் இம்மக்களின் நியாயமான போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் Gajendrakumar Ponnambalam கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மற்றும் அவர் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்குத் தங்களது பலமான ஆதரவை வெளிப்படுத்தினர்.




























