19 ஆவது நாளில் சுவிசு நாட்டின் ஜெனீவா ஐ.நா. முன்றிலை வெற்றிகரமாக சென்றடைந்த நடைபயணம்!

0
757

தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயண போராட்டம் இன்று (15.09.2019) ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது நாளில் சுவிசு நாட்டின் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் முருகதாசன் திடலை அடைந்தது.

அங்கு ஜெனிவா வாழ் மக்கள் நடைப்பயண வீரர்களை வரவேற்றனர். தொடர்ந்து நாளைய பேரணியில் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here