103 ஆண்டுகளாகத் தாகம் தீர்க்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல்!

0
17

நல்லூர் கந்தபெருமானின் மகோற்சவத்தை முன்னிட்டு, 103 ஆண்டுகால பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் நல்லூரான் தண்ணீர் பந்தல் மீண்டும் அடியவர்களின் சேவைக்காக எழுந்து நிற்கிறது.

மரங்கள்,பனை மரங்கள் ,கிடுகுகள் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால், தொன்மை மாறாத பாரம்பரிய முறையில் அமைக்கப்படும் இந்தப் பிரமாண்ட பந்தல், ஒரு நிழற்குடை மட்டுமல்ல; தலைமுறைகளைத் தாண்டி தொடரும் அறப்பணியின் அடையாளமாகும்.

திருவிழாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான அடியவர்களின் தாகம் தீர்க்கும் குளிர்ந்த குடிநீர், அதிகாலையில் தேநீர், வெயிலிலிருந்து பாதுகாக்கும் நிழல், மணல் பரப்பப்பட்ட குளிர்ச்சியான ஓய்விடம் என பக்தர்களுக்குத் தேவையான அனைத்தையும் அன்போடு வழங்கி வருகிறது இந்தப் பந்தல்.

தற்போது, 103ஆவது ஆண்டின் சேவைக்கான பந்தல் அமைப்புப் பணிகள் நல்லூரின் பிரதான வீதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தபெருமானின் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஏற்கனவே பக்தி, பாரம்பரியம் மற்றும் தொண்டின் புனித உணர்வால் விழாக்கோலம் பூண்டுள்

(நன்றி: தர்சன)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here