பெல்சியத்தில் கடும் வெய்யிலுக்கு மத்தியில் இடம்பெற்ற உரிமைக்காக எழு தமிழா 2026 நிகழ்வு!

0
221


பெல்சியம் தலைநகர் புறுசெல் நகரில் “உரிமைக்காக எழு தமிழா” எழுச்சி நிகழ்வு இன்று 22.06.2026 திங்கட்கிழமை நண்பகல் பேரணியாக ஆரம்பித்து ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் எழுச்சி அடைந்துசிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெல்சியம் நாட்டுத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.

.தியாக தீபம் திலீபன், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு அனைத்துலக இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இளையோர்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது

நினைவுரைகளும் இடம்பெற்றன. சிறப்புரையை அனைத்துலகத் தொடர்பாகப் பொறுப்பாளர் திரு.மகேஸ்வரன் ஆற்றியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here