
பலாலியில் கடந்த 36 ஆண்டுகளாக மக்களது காணிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும்.
காணிகள் அனைத்தும் மக்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். எனக்கோரி இன்று 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இடம்பெற்று வருகின்றது.

இன்று கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் மக்கள் தமது பூர்வீக நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர்.



