தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க இளைஞர்கள் உண்ணாவிரதம்

0
215

தமிழகம் .நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெளிநாட்டு குளிர்பானங்களை தயாரிக்கும் ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து பாளையங்கோட்டையில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து அதன் விற்பனை மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டு வருகிறது. தமிழக வணிகர்கள் சங்கமும், கோக், பெப்சியை விற்க மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளன.
வறட்சி காரணமாக விவசாயிகள மடிந்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து பாளையங்கோட்டை, நெல்லை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமூகவலைதளங்கள் மூலம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் திரண்ட இளைஞர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here