
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் 63 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ.நா. நோக்கிய ஈருருளி பயணக் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 26.08.2026 அன்று பிரித்தானியா பிரதமர் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 14.09.2026 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடையவுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணத்திற்கு வலுசேர்க்கஅனைத்து உறவுகளையும் 26.08.2026 அன்று காலை 10.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக வருமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் .கேட்டுள்ளனர்.


