தமிழர்கள் அனைவரும் ஐ.நா சபையின் முன்னால் வலுவான குரலாக ஒலிக்க வேண்டிய தருணமிது!

0
51

எம் தமிழ் உறவுகளே!

தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.

தாய் நிலத்தில் இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராடும் நம் உறவுகளுக்குத் துணையாக நிற்பதும்,

உலக அரங்கில் நீதிக்காகக் குரல் கொடுப்பதும் நம் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும்.

​ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டி, நம் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

இந்த நியாயமான நீதிக்கான தேடலில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு, ஐநா சபையின் முன்னால் 14.09.2026 அன்று வலுவான குரலாக ஒலிக்க வேண்டிய தருணமிது.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் கூறிய “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற உன்னத வேணவாவினை நெஞ்சிருத்தி ​இப்போராட்டங்களுடன் அனைவரும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.

“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்”

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here