
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளது.
இவ்வனர்த்தத்தில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதோடு, 570 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலியில் உள்ள மருத்துவமனையின் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், மீட்புப் படையினர் மற்றும் இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சான் ஜோஸ் டெல் பால்மர் (San José del Palmar) பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலும் அதிகளவில் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசாங்கம் இதனைத் தேசிய அனர்த்தமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


