இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் 24 இந்திய மீனவர்கள் கைது!

0
265

jpegஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 24 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள குறித்த மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை இன்று  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் மிரான்டா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here