வல்வெட்டித்துறை வானில் எழுச்சிகொண்ட தமிழீழ உணர்வுகள்!

0
432

வல்வெட்டித்துறையில் நேற்று நடைபெற்ற பட்டத்திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் விதமாக அங்கையற் கண்ணி என்று பெயரிடப்பட்டு சிவப்பு கொடிபறக்கும் படகுப் பட்டமொன்றும்.டாங்கி போன்று வடிவமைக்கப்பட்டு தமிழீழ தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாக சிவப்பு மஞ்சள் கொடிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டன.

அதுமட்டுமின்றி ஒரு பட்டத்தில் நிலம் எமது உரிமை எனவும் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அந்த நிகழ்வில்பங்கெடுத்திருந்த அனைத்து மக்களையும் உணர்வுகொள்ள வைத்ததுடன் தமிழீழ மக்கள் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளை மனதில் நிறுத்தியே தமது இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here