
யாழ்_வலிகாமம் வடக்கு,பலாலிச் சந்தியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர்ந்து 8ஆவது வாரமாக இன்று 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை மக்கள் போராட்டம்! இடம்பெறுகிறது.
சொந்த நாட்டில் நாம் அகதிகளாக வாழவேண்டுமா?
எமது பலாலியில் காணிகளை எம்மிடம் ஒப்படை!
எங்கள் நிலம் எங்கள் உரிமை!
போன்ற பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் தமது உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தனர்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு குறிப்பிட்ட மக்களே தமது உரிமைக்காகப் குரல் எழுப்பி வரும் நிலையில் பலரும் எமது மக்களின் துயரங்களை மறந்து சுகபோகங்களிலும் விடுமுறையைக் களிப்பதிலும் குறியாக இருந்துகொண்டு, பலர் சிங்கள அரசோடு ஒட்டி உறவாடி வருவதே எமது தமிழ் மக்களின் இழிநிலை க்குக் காரணமாக இருந்து வருகின்றது.

இவ்வாறு போராடும் மக்களோடு இணைந்து அனைவரும் குரல் கொடுத்தாலே எமக்கு விடிவு கிடைக்கும் என்பதே உண்மை.





