யாழில் கத்திக்குத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!

0
12

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரகு துஷ்யந்தன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் துஷ்யந்தன் படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here